திங்கள், பிப்ரவரி 06, 2012

சுகமான சுமைகள்………… பாகம் 16.




பெரிய இவன் மாதிரி பேசறான். தெருவுல போறவனுக்கு செலவு பண்ற மாதிரி ஓசி அதுயிதுங்கறான். எவளாவது ஈன்னு இளிச்சிக்கிட்டு வந்தா செலவு பண்ற நாய் ப்ரண்ட்ஸ்க்கு செலவு பண்ண இப்படி யோசிக்குது. என்ன கேவலமா பேசறான் என எண்ணியபடி இருக்க நேரம் போனதே தெரியவில்லை 

கோபமாக ரூம்க்கு வந்த ரமேஷ் ஏன்டா இப்படி பண்ண?. 

போய் கதவ திறடா என கோபம் குறையாமல் சொல்ல என்னை வெறுப்பாக பார்த்துவிட்டு போனவன். பொண்ணுங்க பயந்துடுச்சிங்க. ப்ரியா கண் கலங்கிடுச்சி. எதுக்கு காரணமேயில்லாம கத்தன என கேட்டபடியே கதவை திறந்து லைட் போட்டான். 

துணியை மாத்தியபடியே நான் தான் கைய விடுன்னு சொல்றன் கேட்காம கைய பிடிச்சிக்கிட்டு பில் தராம தடுத்தா என்ன பண்றத்து. 

அது சரி ஜான் தானே ட்ரீட் தர்றான்னு சொன்ன. அப்பறம் எதுக்கு நீ பில் தந்தா?. 

சும்மா தான். 

அவன் ஏதாவது சொன்னான. அதெல்லாம் ஒன்னும்மில்ல என்னை தனியா விடு. 

ரூம் வாசலில் நிழலாடுவதை கண்டு திரும்பி பார்த்தேன். ஜான் நின்றிருந்தான். 

நான் கோபமாக முகத்தை திருப்பிக்கொண்டேன். 

ரமேஷ், அவனை பார்த்து நீ என்னடா வீட்டுக்கு போகாம இங்க வந்துயிருக்க. 

அமைதியாக என்னை பார்த்த ஜான் மச்சான்….

நீ தயவு செய்து பேசாத. அப்பறம் நமக்குள்ள சண்டை தான் வரும். வீண் பிரச்சனை வேணாம் நீ கிளம்பு. 

நான் சொல்றத கொஞ்சம் கேளுடா. 

நான் எதையும் கேட்க விரும்பல. நீ கிளம்புடா என கோபமாக பேச எதுவும் சொல்லாமல் கிளம்பிவிட்டான். 

நான் பெட்ஷீட்டை எடுத்து முகம் வரை மூடிக்கொண்டு படுத்தேன். தேவையில்லாம கத்திட்டமோ என உள் மனம் கேள்வி கேட்டது. அவன் அப்படி சொன்னது மட்டும் சரியா என எதிர்வாதமும் புரிந்தது. ஜான் மேல கோபப்படறது சரி. சம்மந்தமேயில்லாம எதுக்கு ப்ரியாவ திட்டனும். அதுவும் வாடீ, போடீன்னு, மத்த பொண்ணுங்க என்ன நினைக்குதுங்களோ என மனம் குழப்பத்தில் தவிக்க தூங்கிப்போயிருந்தேன். 

காலையில் எழுந்தபோது மணி எட்டாகியிருந்தது. துணி மாத்திக்கொண்டுயிருந்த ரமேஷ் சீக்கிரம் குளிச்சிட்டு வாடா டைம்மாகிடுச்சி. தூங்கி எழுந்தும் மனம் பாராமாகவேயிருந்தது. 

நீ முன்னாடி போ நான் வர்றன். அவன் திரும்பி பார்த்துவிட்டு தலைவார தொடங்கினான். எழுந்து பாத்ரூம்க்குள் போனேன். சீக்கிரம் வாடா நான் போய்க்கிட்டுயிருக்கன். 

ரூம்க்குள் வந்து தலையை துவட்டியபடி பார்த்தேன். தோசை சுட்டு வைத்திருந்தான். சாப்பிட்டுவிட்டு ஒரு நோட்டை எடுத்துக்கொண்டு நடக்க தொடங்கினேன். வகுப்புக்குள் சென்றபோது மணி பத்தரையாகியிருந்தது. 

துரை வர்ற டைம் இதுதானா என நக்கல் அடித்த எக்னாமிக்ஸ் புரபஸர். அடுத்த க்ளாஸ்க்கு வா என்றார். வெளியே வந்தேன். எப்போதும் அமரும் அந்த புங்க மர பெஞ்ச்சில் வந்து அமர்ந்தேன். நேற்று நடந்த சம்பவத்தின் பாரம் கொஞ்சம் மனதில் குறைந்தது போல்யிருந்தது.  

அடுத்த க்ளாஸ்க்கு பெல் அடிக்க வகுப்பை நோக்கி நடந்தேன். வராண்டாவில் ப்ரியா என் எதிரே வந்தாள். நிறுத்தி ஸாரி கேட்கலாம் என எண்ணும்போதே வேகவேகமாக முகத்தை தொங்கப்போட்டுக்கொண்டு என்னை கடந்து வேகவேகமாக போனால். கோபம் குறையல போல என எண்ணியபடி நான் வகுப்புக்கு வந்து கடைசி பெஞ்ச்சில் போய் உட்கார்ந்ததும் ஜான் திரும்பி ஸாரி மச்சான் என்றான். அவன் குரலை கேட்டதும் மீண்டும் கடுப்பாகி எழுந்து வெளியே வந்தேன். 

எங்கு போவது என தெரியாமல் ரூம்க்கே திரும்பிவிட்டேன். ரூம்மை திறந்து தரையில் உட்கார்ந்தேன். நாயீ இவனால அவளை திட்டி அவளும் பேசாம போறா என எண்ணியபடி அப்படியே படுத்து தூங்கியும் போயிருந்தேன். மதியம் இரண்டு மணி வாக்கில் யாரோ கதவு தட்டும் சத்தம் கேட்டு எழுந்து பார்த்தபோது திறந்திருந்த கதகை தட்டியபடி நின்றிருந்தாள் ப்ரியா. 

என்ன வேணும், யார் ரூம்ம காட்டனது. 

என்ன பிரச்சனை. எதுக்கு காலேஜ் வந்துட்டு திரும்பி வந்த?. 

அது என் இஸ்டம். அதை நீ கேட்காத. 

நான் கேட்காம வேற யார் கேட்பாங்க. 

வீணா கோபத்தை கிளப்பாம இங்கிருந்து போய்டு. கோபம் வந்தா என்ன பேசறன்னு எனக்கே தெரியாது.

நீ பேசனதத்தான் நேத்தோ கேட்டனே. 

கேட்டயில்ல கிளம்பு. 

உனக்கும் ஜான்க்கும் என்ன பிரச்சனை ?. 

அத உங்கிட்ட சொல்ல வேண்டிய அவசியம்மில்ல. 

சொன்னா பிரச்சனைய தீர்த்துவைப்பன். 

நாட்டாமை பண்ற வேலையெல்லாம் வேணாம். எங்க பிரச்சனைய நாங்க பாத்துக்கறோம். நீ கிளம்பு. 

அப்ப நீ என்னை நம்பல. 

ஆமாம். கிளம்பு. 

எதுவும் பேசாமல் என்னையே பார்த்துக்கொண்டிருந்தாள். 

இங்க நின்ன எனக்கு கோபம் வரும். கிளம்பு. 

………………

ஏய் கிளம்புங்கறன்யில்ல. கிளம்பாள் நின்றிருக்க கடுப்பாகி போடீ முதல்ல என கத்தியதும் படியிறங்கினாள். அவள் போன சில நிமிடங்களில் தயா, அகிலன், ரமேஷ் மூவரும் வந்து கட்டிலில் அமர ஜான் மட்டும் வாசலில் நின்றுக்கொண்டிருந்தான். 

அவன்களை பார்த்துவிட்டு தரையை பார்த்தபடி அமர்ந்திருந்தேன். 

என்னடா ஆச்சி. நல்லா தானே எல்லாரும் பேசிக்கிட்டுயிருந்தோம். அப்பறம் என்ன பிரச்சனை என கேட்டான் தயா. 

நான் அமைதியாக இருந்ததை பார்த்து ஸாரி மச்சான் நான் அப்படி சொல்லியிருக்க கூடாது மன்னிச்சிடுடா என்றான் ஜான். 

என் முன்னால நிக்காத போய்டு. பேசறத பேசிடுவாரு. அப்பறம் ஸாரி, பூரிம்பாரு அத நாங்க கேட்டுக்கனும். நாங்க என்ன சூடு சொறனை இல்லாதவங்கள?. என்னையென்ன சூடு, சொறனையில்லாமலா வளத்து விட்டுயிருக்காங்க. 

அப்படி என்னத்தாண்டா சொன்னான் என கேட்டான் அகிலன். 

அத அவன்க்கிட்டயே கேளு. 

ஜான் பேசியதை தடுமாற்றத்துடன் சொன்னதும். 

உடனே தயா, அவன் கோபத்தல நியாயம்மிருக்குடா. நாங்க எங்க ஜோடியோட வந்தோம். நீ, அகிலன், ப்ரியா அதோட தோழிங்க இரண்டு பேர்ன்னு மொத்தம் பத்து பேராயிடுச்சி. இவ்ளோ பேர் சாப்டதுக்கு பில் தரனம்ன்னு நினைக்கும் போது யாருக்கு தான் கோபம் வராது. அவனாயிருக்கவே உன்ன மட்டும் திட்டனான். நானாயிருந்தா கேவலமா எல்லாரையும் திட்டியிருப்பன்.  

ஏய் நிறுத்துடா. காசுயில்லன்னு சொல்லியிருந்தா ஷேர் பண்ணியிருக்கலாம். அதுக்கு இப்படியா பேசறது என கேட்டான் அகிலன். 

விடுங்கடா. அவன் ரூட் விடற பொண்ணு இருந்தா ஈன்னு இளிச்சிக்கிட்டு செலவு பண்ணியிருப்பான். யாரும் இல்லைங்கறதால இவுங்களுக்கு எதுக்கு செலவு செய்யனம்ன்னு கடுப்புல சொல்லியிருப்பான் விடுடா இதப்போய் பெருசா எடுத்துக்கிட்டு என்றான் ரமேஷ். 

நான் பேச்சை மாற்றும் விதமாக எனக்கு பசிக்குது. நீங்க சாப்டிங்களா?.

நக்கல்டா. காலேஜ் விட்டதும் உன்ன பாக்க கிளம்பனோம். ப்ரியா வழியில பாத்து நீ எங்கன்னு கேட்டுச்சி ரூம்ல இருப்பான்னு சொன்னோம். நானும் வரன்னு வந்துச்சி. நீ போய் பேசிட்டு வான்னு அனுப்பிட்டு நாங்;க கீழ வெயிட் பண்ணோம். நீ கத்தனது கீழ இருந்த எங்களுக்கு கேட்டுச்சி என்றான் ரமேஷ். 

ஓன்னாதானே வந்திங்க. அப்பறம் என்ன அவளை மட்டும் தனியா அனுப்பிவச்சிங்க. 

பர்சனலா ஏதாவது பேசுவிங்கன்னு தான் என அகிலன் இழுத்தான். 

அதுங்கிட்ட பர்சனலா பேசறதுக்கு எதுவும் கிடையாது. 

சரி. பசிக்குது. சமைச்சிடறன்டா இங்கயே சாப்பிட்டலாம் என்றபடி எழுந்தேன். ஜான் தலையை தொங்கப்போட்டபடி இவ்வளவு நேரமும் வெளியவே நின்றிருந்தான். என்ன சார் இங்க சாப்பிடறிங்களா? இல்ல வீட்டுக்கு போறிங்களா?. 

இங்கயே சாப்பிடறன். 

அப்பறம் எதுக்கு வெளியில நிக்கற ?

உள்ளே வந்து கட்டிலில் அமர்ந்தான். 

என்னடா நடத்தனாங்க.

அறுத்தானுங்க மச்சான் என்றான் தயா. பின் ஏதோதோ பேச தொடங்கினோம். 1 மணி நேரத்தில் சாப்பாடு தயாராக சாப்பிட்டுவிட்டு கேரம் போர்டு ஆட தொடங்கினோம். இரவு தான் மூவரும் வீட்டுக்கு கிளம்பினான்கள். மச்சான் தம் வாங்கிட்டு வந்துடறன்டா என போனான். 

ஜான் மட்டும் தயங்கி தயங்கி, நீ ப்ரியாவ அதிகமா திட்டிட்டடா. பாவம் நேத்தும் அழுதுக்கிட்டே போச்சி, இன்னைக்கும் அழுதுக்கிட்டே போச்சி. 

இப்ப அதுக்கு என்னங்கற?. 

பதில் பேசாமல் நான் கிளம்பறன் எனச்சொல்லிவிட்டு போனான். நேத்து திட்டனது சரி, இன்னைக்கு எதுக்கு தேவையில்லாம அத திட்டனும். கோவம் வந்தா என்ன பேசறன்னு தெரியறதில்ல காலையில முதல்ல அதுங்கிட்ட ஸாரி கேட்கனும் என எண்ணியபடி தூங்கிப்போயிருந்தேன். 

மறுநாள் காலேஜ் போனதும் ப்ரியாவை தான் தேடி அவளது வகுப்புக்கு போனபோது அவளது தோழிகள் அவ இன்னும் வரல என்றார்கள். மதியம் போனேன் என்னைப்பார்த்தவள் திரும்பிக்கொண்டாள். பேச விருப்பம்மில்ல என திரும்பி வந்து க்ளாஸ்சில் அமர்ந்தாலும் வகுப்பிலும் சரியாக மனம் ஒட்டவில்லை. ஜான் என்னடாச்சி என்றான். 

நீ பேசாத ?. 

ஏய் அதான் மன்னிப்பு கேட்டுட்டனே என்றான் வெறுப்பான குரலில். 

நான் மன்னிச்சன்னு சொல்லலயே. 

தப்பா பேசிட்டன் மன்னிச்சிடுன்னு கால்ல விழட்டுமா?. அமைதியாக அவனை பார்த்தேன். அவன் மீதான கோபத்தை விட என்மீது ப்ரியா வெறுப்பில் இருக்கிறாளே என்பதே அதிகமாக மனதை ஆக்ரமித்திருந்தது. காலேஜ் முடிந்ததும் அவளை பார்க்க போனேன். க்ளாஸ் ரூம்மே காலியாக இருந்தது. 

ரூம்க்கு வந்து மொட்டை மாடியில் நின்றிருந்தேன். எப்படி அவளை சமாதானம் செய்யலாம் என யோசித்துக்கொண்டுயிருந்தேன். ரூம்க்கு வந்த ஜான் உங்கிட்ட பேசனும் வாடா வெளியில போலாம்.

எனக்கு வேலையிருக்கு. 

என்ன புடுங்கற வேலையிருக்கு என்றவன். ரமேஷ்சையும் கிளம்ப சொன்னான். 

பைக்கை மக்கான் பகுதியில் இருந்த அந்த ஒயின்ஸ் வாசலில் நிறுத்தினான். இங்க எதுக்குடா கூப்ட்டு வந்தான் என கோபமாக கேட்டதும் எதையும் காதில் வாங்காமல் போய் கிங் பிஷர் பீரும், பக்கத்தில் இருந்த பாய் கடையில் சிக்கன் வாங்கி வந்து ரமேஷ்சிடம் தந்துவிட்டு வண்டியை எடுத்தான். கோட்டையின் மதில் சுவர் ஓரமாக நிறுத்தியவன் நான் சொன்னது தப்பு தாண்டா. ஏன் சொன்னன்னு தெரியுமா?. 

நான் குடிக்கறது தெரிஞ்சி எங்கப்பா சுத்தமா காசு தர்றத நிறுத்திட்டாரு. எங்கம்மாக்கிட்ட நைசா பேசி காசு வாங்கிக்கிட்டு வர்றன். அதயும் ஒரு வாராம தரக்கூடாதுன்னு சொல்லி நிறுத்திட்டாரு. தம்மடிக்க கூட காசுயில்லாம திரியறன். நீ திடீர்ன்னு நான் ட்ரீட் தருவான்னு சிக்கவச்சிட்ட. எனக்கு எப்படியிருக்கும். நான் காசுயில்லாம வேற ஒருத்தர்க்கிட்ட 500 ரூபா கடன் வாங்கி வந்தான். நீ என்னடான்னா நான்வெஜ்ன்னா தான் வருவங்கற. தப்பி தவறி எல்லாரும் ஒ.கே சொல்லியிருந்தா என் நிலைமை என்னவாயிருக்கும் யோசிச்சி பாத்தியா?.

நீ காசுயில்லைங்கறத முதல்லயே சொல்லியிருக்கனும். சொல்லாதது உன் தப்பு.

இவர்க்கிட்ட மட்டும் காசு கொட்டிகிடக்கு. உங்கப்பா அனுப்பற 2 அயிரத்த வச்சிக்கிட்டு காலத்த ஓட்டற. பணம்மில்லன்னு இவர்க்கிட்ட சொன்னதும் அப்படியே எடுத்து குடுப்பாரு.

இப்ப மட்டும் குடிச்சிட்டு போறியே உங்கப்பா கேட்கமாட்டாறா?.

சனி, ஞாயிறு லீவுங்கறதால வீட்ல எல்லாரும் வேளாங்கண்ணி போயிருக்காங்க. வீட்ல நான் மட்டும் தான். நீ திட்டனயா மனசு சரியில்ல அதான் மனசுல இருக்கறத சொல்லலாம்ன்னு அழைச்சி வந்தன் என்றான்.

சரக்கு வாங்கனதுக்கு பதிலா கடனை திருப்பி தந்துயிருக்கலாம்மில்ல?.

ஹோட்டல்ல நீ பில் தந்ததும் வாங்கன கடனை திருப்பி தந்துடலாம்ன்னு தான் பாத்தன் மச்சான். ஆனா கடன் கேட்டப்ப ஏதோ லட்ச கணக்குள கேட்ட மாதிரி அட்வைஸ்சா பொழிஞ்சான் நாதாரி. அவன் கடனை திருப்பி வாங்க நாயா அலைய விடனம்ன்னு முடிவு பண்ணிட்டன் எனச்சொல்லியபடி பாட்டிலை ஓப்பன் செய்து தந்தான்.

அடுத்த இரண்டு நாளும் ஜான் வீட்டில் டிவி பார்ப்பது, சாப்பிடுவது என பொழுது ஓடியது. அதற்கடுத்த நாள் காலை, காலேஜ்ஜில் புங்க மர பெஞ்சில் அமர்ந்திருந்தேன்.

அடுத்து ஒருவாரமாக ப்ரியாவை பார்க்க முடியவில்லை. அன்றுதான் காலேஜ்க்குள் நுழையும்போது அவளை பார்த்தேன். சைக்கிள் ஸ்டான்டில் சைக்கிளை நிறுத்திவிட்டு வந்துக்கொண்டிருந்தாள்.

என்னைப்பார்த்தவள் வேறு பக்கம் முகத்தை திருப்பிக்கொண்டு போனவளை நெருங்கியதும் நின்றவள். என் மேல கோபமா இருப்பன்னு தெரியும். அவன் பேசனது அந்த மாதிரி அதனால கோபம். கோபத்தல என்ன பேசறதுன்னு தெரியாம உன்ன திட்டிட்டன் ஸாரி என்றதும் பளார் என கன்னத்தில் அடித்தவள் எரித்துவிடுவது போல் பார்த்துவிட்டு வேகமாக போனாள்.

காலேஜ்க்குள் அடிவாங்கிய அவமானம் உடம்பெல்லாம் எரிந்தது. நற நறவென பல்லை கடித்தபடி அப்படியே நின்றிருந்தேன். சில பெண்கள் அதை பார்த்துவிட்டு என்னை கேவலமாக பார்த்தபடி போயினர்.

கோபமாகவே க்ளாஸ்க்குள் நுழைந்ததும் வா மச்சான் என்றான் ஜான். வகுப்பு ஆரம்பித்ததும் தெரியவில்லை, முடிந்ததும் தெரியவில்லை. மதியம் வந்திருந்தது. எதுக்கு அடிச்சா? எவ்ளோ கொழுப்புயிருந்தா இப்படி பண்ணியிருப்பா என மனம் அதிலே தான் சுற்றி வந்தது. லஞ்ச் டைமில் அவள் வகுப்புக்கு தான் போனேன். ஆள்யில்லை. சாயந்தரம் பாத்துக்கலாம் என இருந்தேன். சாயந்தரமும் க்ளாஸ்சில் இல்லை. இரவெல்லாம் தூக்கமேயில்லை. மனதில் கோபம் குறையாமலே இருந்தது. காலையில் எழுந்து சீக்கிரமாக காலேஜ்க்கு வந்த நான் வகுப்புக்கு செல்லாமல் எப்போதும் அமரும் அந்த பெஞ்ச்சில் அமர்ந்திருந்தேன்.

ப்ரியா வருவதை பார்த்துவிட்டு வாடீ வா என்னையா அடிக்கற, உன்ன இன்னைக்கு ஒழிச்சடறன் என கருவிக்கொண்டு அமர்ந்திருந்தேன். சைக்கிளை நிறுத்திவிட்டு வந்தவள் நான் அமர்ந்திருப்பதை பார்த்துவிட்டு அருகே வந்து, நோட்டை பக்கத்தில் வைத்துவிட்டு நோட்டுக்குள் இருந்து எதையோ எடுத்து வலது கையில் கட்ட தொடங்கினாள்.

கறுப்பு கயிற்றை கட்டிவிட்டு கோபம் வரும்போது இந்த கயித்தை தொட்டுப்பாரு எல்லாம் சரியாகிடும்ன்னு எனச்சொல்லிவிட்டு நோட்டை எடுத்துக்கொண்டு திரும்பினால்.

நில்லு.

திரும்பியவள் கன்னத்தில் ஓங்கி ஒரு அரைவிட்டேன். நான் அன்னைக்கு உன்ன திட்டனதுக்கு நிஜமாவே வருத்தப்பட்டன். அதுக்காக தான் உங்கிட்ட ஸாரி கேட்டன். அது புடிக்கலன்னா நீ என்னை பதிலுக்கு திட்டியிருக்கலாம். அதவிட்டுட்டு என்னை அடிச்சி அசிங்கப்படுத்தனதுக்கு தான் இந்த அடி என பேசியதை கேட்டு அழுகையோடு நின்றுக்கொண்டிருந்தாள்.

அவளின் கண்ணீல் நீரை பார்த்ததும் திடீரென மனம் இறங்கியது. திரும்பவும் அவசரப்பட்டுட்டமோ என எண்ணியபடி ஸாரி கேட்டுடலாம் என நினைத்து தயங்கி தயங்கி ஸாரி ப்ரியா என்றேன்.

பளார்ரென கன்னத்தில் விழுந்தது அடி.

அன்னைக்கு நான் அடிச்சது, இப்ப அடிச்சது என்னை நீ அடிச்சியேங்கறதுக்காக இல்ல. எங்கிட்ட ஸாரி கேட்டயே அதுக்காக தான்.

என்னன்னு தெரியல. உம்மேல எனக்கு இனம் புரியாத பாசம், அன்பு மனசுலயிருக்கு. உனக்கு என்னை திட்டறதுக்கும், அடிக்கறதுக்கும் உரிமையிருக்கு. ஆனா ஸாரி, மன்னிச்சிடுன்னு கேட்கறதுக்கு உரிமையில்ல. நான் என்ன தெருவுல போறவள இடிச்சிட்டமேன்னு ஸாரி சொல்றதுக்கு. உன் ப்ரண்ட். உன் நல்லது கெட்டதுல பங்கு எடுத்துக்கனம்ன்னு நினைக்கறன். நீ அப்படி நினைச்சா, உன்மையிலயே என் மேல அக்கறையிருக்குன்னா இனிமே ஸாரி கேட்காத எனச்சொல்லிவிட்டு கண்ணை துடைத்துக்கொண்டு வகுப்பை நோக்கி நடந்தாள்.

அவள் பேசியதை கேட்டு அதிர்ந்து போய்விட்டேன். இவளுக்கு நான் என்ன செய்துவிட்டேன். பார்த்து, பேசி பழகி சில நாட்கள் கூட ஆகவில்லை. அதற்குள் அன்பு, பாசம்ங்கறா, என்னை அடிக்கற உரிமையிருக்கு நீ என் நண்பன்டாங்கறா. அவளை நாம் தான் புரிந்துக்கொள்ளாமல் விட்டுவிட்டோமோ. ட்ரையின் நட்பு போல் இவளை நினைத்தது தவறோ என மனதில் கேள்விகள்.

மதியம் அவளை பார்க்க க்ளாஸ்க்கு போயிருந்தேன். க்ளாஸ் ரூம் பூட்டியிருந்தது. அடத்த இரண்டு நாட்களும் அவள் காலேஜ் வரவில்லை.

ஜானிடம் ஏண்டா ப்ரியா வரல.

நானும் உங்கூட தானே இருக்கன். எனக்கு என்ன தெரியும்?.

அமைதியாக இருந்ததை கண்டவன் தேவியும் அதுவும் பக்கத்து பக்கத்து வீடுதான். க்ளாஸ் முடிஞ்சி அவுங்க வீட்டுக்கு போய் தேவிக்கிட்ட கேட்டா சொல்லும் என்றான்.

தேவி வீட்டுக்கு நாமதான் இதுக்கு முன்னாடி போனதில்லயே.

ஆமாம் பெரிய ஜார்ஜ்புஷ் வீட்டுக்கு போறோம். பயந்துக்கிட்டே போறதுக்கு வாடா பாத்துக்கலாம்.

சாயந்தரம் தேவி வீட்டு காலிங்பெல் அடித்ததும் தேவியே வந்து கதவு திறந்தவள் ஆச்சர்யமாகி ஏய் வாங்கடா என சந்தோஷத்தில் அம்மா என் ப்ரண்ட்ஸ் வந்திருக்காங்க என கூச்சலிட்டாள். உள்ளிருந்து வந்தவர்கள் வாங்கப்பா என்றார்கள்.

வர்றோம்மா என்றதும் எங்களை அறிமுகப்படுத்தி வைத்தாள். குடும்பத்தை பற்றி விசாரித்தவர்கள் டீ போட்டு எடுத்து வர்றன் என உள்ளே போனார்.

அதிசயமா இருக்குடா நீங்க வீட்டுக்கு வந்தது. இப்பவாவுது வீட்டுக்கு வரனம்ன்னு தோனுச்சே என்றவளிடம் ப்ரியாவை பத்தி எப்படி கேட்பது என தயங்கிக்கொண்டே இருந்ததை கவனித்தவள்.

என்னப்பா ஒருமாதிரியா இருக்க என கேட்டாள்.

ஓன்னும்மில்ல எனும்போதே தேவி அம்மா டீ கொண்டு வர வாங்கி குடிக்க ஆரம்பித்தோம்.

ம்மா. இவுங்க நம்ம ப்ரியாக்கூட தான் படிக்கறாங்க. அவ வீட்டுக்கும் கூட்டிட்டு போய் காட்டிட்டுட்டு வர்றன் என சொல்லிவிட்டு அழைத்தும் போனாள்.

வீடு சிறியது தான் வீட்டின் முன் இருந்த புங்கமர, வேப்பமர காற்றும், மல்லிப்பூ வாசனை நாசியை துளைத்தது. கதவு திறந்தேயிருந்தது.

ஆன்டி என அழைத்தபடி தேவி முன்னே போனால். வாடீயெம்மா என்ற குரல் வர வாசலில் தயங்கி நின்றோம். சமையல் கட்டில் இருந்து ஜன்னல் வழியாக எங்களைப்பார்த்தவர் உள்ள வாங்கப்பா என ஹாலுக்குள் வந்தவர் உட்கார வைத்தார்.

இதல யாருப்பா ராஜா?.

எடுத்ததுமே இந்த கேள்வி கேட்டதும் புரியாமல் நான்தாம்மா.

உன்னப்பத்தி நிறைய சொல்லியிருக்கறா. அவளுக்கும் உனக்கும் என்ன சண்டை என அடுத்த அஸ்திரத்தை எய்தபோது அதிர்ச்சியில் வார்த்தை வரவில்லை.

இரண்டு நாளா அவ சரியாவே சாப்பிடல. கேட்டதுக்கு நீ அவளை திட்டிட்டன்னு சொன்னா அதான் கேட்டன். நீ எப்படியும் வருவன்னு சொல்லிக்கிட்டேயிருந்தா. இப்பத்தான் அவுங்க அப்பா வரச்சொன்னாருன்னு போனா வந்துடுவா. டீயா? காபியா? ஏன கடகடவென பேசினார்கள்.

இப்பத்தான் ப்ரியா வீட்ல சாப்ட்டோம். கொஞ்ச நேரமாகட்டும் என்றதும் அப்ப சுவீட்டாவது சாப்பிடுங்க. இல்ல இருக்கட்டுமா ?.

அவுங்கயெல்லாம் நம்ம வீட்ல சாப்பிடமாட்டாங்க என்றபடி உள்ளே வந்தாள்.

அய்யோ டைம்மாகிடுச்சே நான் போய் பால் வாங்கி வந்துடறன் ஸ்வீட் எடுத்து வை என ப்ரியா அம்மா சொல்லிவிட்டு பால் கிண்ணத்துடன் வெளியே போனார்.

லூசா நீ. சண்டைபோட்டதெல்லாம் வீட்ல சொல்லிவச்சியிருக்கற.

நான் எங்கம்மாக்கிட்ட எதையும் மறைச்சதில்ல.

நான் அடிச்சத, நீ என்னை அடிச்சதக்கூட சொன்னீயாக்கும்?.

மறந்துட்டன் சொல்லிடறன்.

உடனே ஜான், இது எப்படா நடந்துச்சி. சொல்லவேயில்ல.

போஸ்டர் அடிச்சி ஒட்டறன்.

இவன்க்கிட்ட சொல்லியிருந்த மைக், செட் வாடகைக்கு எடுத்து ஊர் முழுக்க பரப்பியிருப்பான் என ஜான் கிண்டலடிக்க. நீ மட்டும் யோக்கியமா?. நீ லட்டர் எழுதி ஜனாதிபதிக்கே தகவல் சொல்லியிருப்ப. நீ என்னைப்பாத்து சொல்ற.

ஏய் நிறுத்துங்க உங்க சண்டைய என்றபடி. ஆமாம் எதுக்கு இரண்டு நாளா காலேஜ் வரல?.

உன்ன வீட்டுக்கு வர வைக்கனம்ன்னு தான் லீவு போட்டன்.

அய்ய மூஞ்ச பாரு.

எம் மூஞ்சி நல்லா தான் இருக்கு.

இரண்டு பேரும் அடிவாங்கப்போறிங்க பாரு என கோரஸாக தேவியும், ஜானும் சொல்ல. சைலண்டானோம்.

தொடரும்…………


சுகமான சுமைகள்.......... பகுதி 15


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக