ஞாயிறு, பிப்ரவரி 12, 2012

சுகமான சுமைகள்………… பாகம் 18.




படிக்க வர்றிங்களா இல்லை சண்டை போட வர்றிங்களா? அடிச்சிக்கறவனுங்க வெளியில போய் அடிச்சிக்கிட்டு சாகுங்க. காலேஜ்க்குள்ள வந்து ஏன் எங்க உயிர வாங்கறிங்க. எதாவது ஆகியிருந்தா எவன்டா பதில் சொல்றது. இனிமே காலேஜ் சண்டை போட்டாலோ, உங்க மேல வேற ஏதாவது புகார் வந்துச்சின்னா இங்க மட்டும்மில்ல, வேற எங்கயும் படிக்க முடியாதபடி செய்துடுவன் ஜாக்கிரதை. இனிமே தப்பு பண்ண மாட்;டோம்ன்னு எழுதி தந்துட்டு போங்க என இட்லராக மாறி பரேடு எடுத்தார் பிரின்ஸ்பால். 

மன்னிப்பு கடிதம் எழுதி தந்துவிட்டு வெளியே வந்ததும் உன்ன விடமாட்டன்டா என்றான் ரவி. 

புடுங்கிடுவாரு. போடா என்றேன். 

லஞ்ச் டைமில் புங்கமரத்தின் கீழ்தான் அமர்ந்திருந்தோம். கோபமாக வந்த ப்ரியா சொன்னா கேட்டாதானே. அவனைப்போய் எதுக்கு அடிச்ச. 

நீ மட்டும் வந்து இழுக்கல அவன் கையை உடைச்சியிருப்பன். 

எதுக்கு உனக்கு இவ்ளோ கோபம். 

ஒழுங்கா சொன்னன் கேட்கல. ராங்கா பேசனான் கோபம் வந்துடுச்சி. 

கோபம் வந்தா கைல நான் கட்டன கயிற பாரு, என்னை நினைன்னு சொன்னன்யில்ல. 

அதனால தான் போகும்போதே கயித்த கோயில்லயே அறுத்து போட்டுட்டன்.

இவனை புடிக்கப்போய் எனக்கு தான் அடிவிழுந்துச்சி என்றான் ஜான். 

உன்ன எவன் மயிற குறுக்க வரச்சொன்னது. 

டேய் சும்மா இருடா. நீ அவனை அடிச்சிட்ட. அவன் உன்ன அடிச்சான். இதோட விட்டா பரவாயில்ல. அவன் மோசமான கேங்க் பசங்களோட இருக்கான். அவனுங்களுக்கு தெரிஞ்சது அவ்ளோ தான். 

ஏய் அவன் ப்ரியாவ டீ போட்டு பேசுவான். கேட்டுக்க சொல்றியா?. அவன் யாரா கூப்டு வந்தாலும் கவலையில்ல. வரட்டும் பாத்துக்கறன். 

என்னடா இப்படி சொல்றான் என ப்ரியா அதிர. 

இவன் கிடக்கறான் டுபுக்கு. நீ சாப்பிட்டயா?

இல்ல. 

போய் சாப்பிடு. நாங்க வெளியில பாய் கடைக்கு போய் சாப்டுட்டு வர்றோம் எனச்சொல்லிவிட்டு நடந்தபடியே அதும் முன்னாடி போய் சொல்றியேடா. பைத்தியமாடா நீ. 

உண்மையை தானே சொன்னன். 

வெங்காயத்த சொன்ன. 

மச்சான், வயித்துலயே குத்திட்டாண்டா வலி உயிர் போகுதுடா என்றபடியே பாய் கடையில் சாப்பிட்டுவிட்டு காலேஜ்க்கு வந்திருந்தோம்.  வழியில் என்னை பார்த்து முறைப்பதாகவே இருந்தான் ஜான். 
அடுத்த சில நாளில் தேர்வு தொடங்கியது. கடைசி நாள் பரிச்சையன்று ஒரு போன் நம்பரை தந்த ப்ரியா. அடிக்கடி பக்கத்து வீட்ல போய் போன் பேசறது கஸ்டமாயிருந்ததால வீட்டுக்கு லேண்ட்லைன் போன் அப்பா வாங்கிட்டாரு. இதான் நம்பர். ஊருக்கு போனதும் கால் பண்ணு என்றாள். 

ஊருக்கு வந்து சேர்ந்து பசங்களுடன் சுத்தவே நேரம் சரியாக இருந்தது. முத்து, கல்யாணத்துக்கு கூட வரல வீட்டுக்கு வாயேண்டா என்றான். 

வரண்டா எனச்சொல்லிவிட்டு சுற்ற தொடங்கினோம். வாரத்தில் ஒருநாள் ப்ரியாவுக்கும் போன் பண்ணி பேச நாள் போனதே தெரியவில்லை. 

மீண்டும் காலேஜ் போனபோது, ஒரே சந்தோஷம். ஆளாளுக்கு கை கொடுத்துக்கொண்டு பேசிக்கொண்டுயிருந்தோம். 

ப்ரியா நாங்கள் நிற்க்கும் இடத்திற்க்கு அருகே வந்தவள் சார் எங்கள மறந்தாச்சோ என்றாள் என்னைப்பார்த்து. 

சப்ப பிகரா இருக்கே. உனக்கு தெரிஞ்சவங்களா ஜான். 

நான் பிகரா என அடித்தவள். எப்படா ஊருக்கு வந்த?. 

நேத்து.

ஏன் ஃபோன் பண்ணல. 

ரூம் கிளின் பண்ணன். 

ஈவ்னிங் வீட்டுக்கு வா எனச்சொல்லிவிட்டு கிளம்பினால். 

அப்போது தான் கவனித்தேன் ரவி எங்கள் பின்னால் நின்று என்னை சுட்டிக்காட்டி அவனுடன் இருந்த சிலரிடம் ஏதோ சொல்லிக்கொண்டுயிருந்தான். அவர்களை இதற்கு முன் காலேஜ்ஜில் பார்த்ததில்லை. 

அவன்கள் ஜிம்முக்கு செல்பவர்கள் என்பது உடம்பை பார்க்கும் போதே தெரிந்தது. மனம் திக் என்றது. மனதில் ஒரத்தில் வர்றது வரட்டும் பாத்துக்கலாம் இருந்தேன். அவன்கள் கிளம்பி போவதும் தெரிந்தது. 

வகுப்புக்கு வந்தும் நம்மை அடிக்கச்சொல்லியிருப்பானா இல்ல மிரட்ட சொல்லியிருப்பானா என மனம் யோசனையிலேயே இருந்தது. சாயந்தரம் காலேஜ்ஜை விட்டு கிளம்பும்போது அவன்களை கண்டேன். காலேஜ் வெளி கேட்க்கு சற்று தள்ளி நின்றிருந்தனர். அன்னைக்குன்னு பாத்து காலேஜ் பீஸ் கட்ட போயிருந்ததால் லேட்டாகி நான் மட்டுமே அப்போது வெளியே வந்திருந்தேன். 

நான்கு பேர் நின்றிருந்தான்கள். தம்மடித்துக்கொண்டு தங்களுக்குள் பேசிக்கொண்டு இருந்தவன்கள் என்னை பார்த்ததும் பேச்சை நிறுத்திவிட்டு தம்மை கீழே போட்டுவிட்டு என்னை முறைத்தபடி நின்றனர். 

மனம் திக் திக் என வேகவேகமாகவே துடித்தது. இவனுங்ககிட்ட மாட்டனா சட்னியாகிடுவோம் அதனால இப்படியே ஓடிப்போயிடலாம்மா என எண்ண தோன்றியது. ஓடனா வந்து புடிச்சி அடிச்சானுங்கன்னா என்ன பண்றத்து. வேற வழியும்மில்ல என்ன பண்றத்து என எண்ணம்போது மனம் நடுங்க ஆரம்பித்தது. 

வீரப்பா அன்னைக்கி பேசிட்டோம் என்ன பண்ணலாம் என யோசிக்கும் போதே. வேகவேகமாக வந்த ஒரு ஆம்னி கார் என்னருகே பிரேக்கடித்து நின்றது. சர்ரென அதன் கதவு திறக்கப்பட்டது. 

தொடரும்………….

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக